மருத்துவ உபகரணங்கள், 100 படுக்கைகளுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ₹40 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, ஆக.8: சென்னை அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில் 2020-21 நிதிநிலை அறிக்கையில் அறிவித்த அறிவிப்பின்படி, ரூ.6.17 கோடி மதிப்பீட்டில் 4ம் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிகிச்சைக்குப்பின் கண்காணிப்பு அறை, அதிதீவிர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவை 25,000 சதுர அடியில் மக்கள் பயன்படும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், இன்போசிஸ் நிறுவனம் சிஎஸ்ஆர் நிதியின்கீழ் ரூ.30 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கியுள்ளது. அதில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகணரங்கள் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனைக்கும், ரூ.10 கோடி மதிப்பீட்டிலான மருத்துவ உபகரணங்கள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.40.05 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய புதிய 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகள் கொண்டவை 62,700 சதுர அடி பரப்பில் கட்டுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதேபோல கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான்-2023 அமைச்சர் மா.சுப்பிரமணியன் சீரிய முயற்சியின் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி நடந்தது. 73,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கின்னஸ் சாதனையாக உரு பெற்றது.

இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பதிவுத்தொகை ரூ.3,42,50,000 மற்றும் அரசு பங்களிப்பு நிதியாக நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.6,85,00,000 மொத்தம் ரூ.10.27 கோடி மதிப்பீட்டில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகள் கொண்ட 62,700 சதுர அடி பரப்பளவில் தரைத்தளத்தில் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கங்கள் போன்ற வசதிகளுடன் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்லையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாட்டினார். இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் தேரணிராஜன், மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி பணிகள் நிலைக்குழு தலைவர் சிற்றரசு, மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 15 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம்

இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்காக மல்லுக்கட்டிய 2 வாலிபர்கள் மோதலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு ஒடுகத்தூர் அருகே பரபரப்பு

உயர்அழுத்த மின்கம்பி மீது உரசிய ரயில்வே கம்பத்தால் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் பயணிகள் அவதி வேலூரில் லாரி மோதியதால்