Thursday, July 4, 2024
Home » மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை பலி

மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை பலி

by kannappan

புழல்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். செங்குன்றம் அடுத்த அலமாதி அம்பேத்கர் நகரை சேர்ந்த பாலாஜி. இவரது மனைவி மித்ரா (20). நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று முன்தினம் காலையில் அலமாதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது மருத்துவர்கள் யாரும் இல்லாததால் அங்கு பணியிலிருந்த செவிலியர்கள் பிரசவம் பார்த்தனர். இந்நிலையில், அதிகாலையில் ஆண் குழந்தை பிறந்து இறந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பாலாஜி இதுகுறித்து தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு வந்த உறவினர்கள் குழந்தை சடலத்தை பெற்றுக் கொண்டு சென்றனர். இதனிடையே மித்ராவுக்கு ரத்தப்போக்கு அதிகரித்தது. உடனே அவரை சென்னை அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தததாக மித்ராவின் உறவினர்கள் சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  அதன்பேரில் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்….

You may also like

Leave a Comment

3 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi