மருதுபாண்டியர்கள் குருபூஜையில் அமைச்சர்கள் பங்கேற்பு

 

சிவகங்கை, அக்.23: திருப்புத்தூரில் நாளை நடைபெற உள்ள மருது பாண்டியர்கள் குருபூஜையில் அமைச்சர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். திருப்புத்தூரில் மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட அக்டோபர் 24அன்று அவர்களது நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அரசின் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.

இந்த ஆண்டு நாளை திருப்புத்தூரில் உள்ள மருது பாண்டியர் நினைவிடத்தில் அவர்களது சிலைகளுக்கும், தூக்கிலிடப்பட்ட இடத்திலும் அமைச்சர்கள் கேஆர்.பெரியகருப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நாளை காலை 9 மணி அளவில் மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர். காலை 8 மணியளவில் கலெக்டர் ஆஷா அஜித் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்