Tuesday, July 2, 2024
Home » மருங்காபுரி அருகே 67 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலில் குதிரை எடுப்பு விழா: 5 கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்பு

மருங்காபுரி அருகே 67 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலில் குதிரை எடுப்பு விழா: 5 கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்பு

by Neethimaan

துவரங்குறிச்சி, ஆக.22: மருங்காபுரி கவுண்டம்பட்டியில் பெரியாண்டவர், பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. 67 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதில் 5 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம் மருங்காபுரி கவுண்டம்பட்டியில் பெரியாண்டவர், பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இதில் அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னர் – சங்கர், அருக்காணி தெய்வங்களும் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு ஆடி மாதம்தோறும் கன்னிப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, சுக்காம்பட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கவுண்டம்பட்டி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த பங்காளி மக்களால் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். 67 ஆண்டுகளுக்கு பிறகு 5 கிராம இளைஞர்களின் முயற்சியால் நிகழாண்டு 3 நாட்களுக்கு நடைபெறும் திருவிழா நேற்றுமுன்தினம் இரவு தொடங்கியது.

தாரைத்தப்பட்டைகள் முழங்க, வாண வேடிக்கையுடன் கன்னிப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, சுக்காம்பட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கவுண்டம்பட்டி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த பெண்கள் தலையில் பொங்கல் பானை, அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் கூடை மற்றும் விறகுகளை சுமந்துகொண்டு  பெரியாண்டவர்,  பெரியநாயகி அம்மன் கோயில் திடலுக்கு வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து ஊர் முக்கியஸ்தர்கள் முன்னே செல்ல அவர்களை தொடர்ந்து அனைவரும் கவுண்டம்பட்டி ஊர் நாட்டாண்மை இல்லத்திற்கு நடந்தே சென்றனர். அங்கு 5 ஊர் விழா காரியஸ்தர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ராஜாபட்டியில் செய்து வைத்திருந்த 5 கிராம குதிரைகளுக்கும், வெள்ளை குதிரையில் இருந்த கருப்பசாமி, சப்த கன்னிமார் உள்ளிட்ட புரவிகளுக்கு தீபாரதனை செய்து கண் திறந்து 5 கிராம இளைஞர்கள் தோளில் சுமந்து கொண்டு வளநாடு குளம் கருவாடு பொட்டலுக்கு வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு கரகம் பாலித்தல் நடைபெற்றது. விடிய விடிய நடந்த திருவிழாவில் 5 கிராமங்களை சேர்ந்த பங்காளிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

You may also like

Leave a Comment

17 − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi