Saturday, June 29, 2024
Home » மராட்டியத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால், முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்க அரசு உத்தரவு

மராட்டியத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால், முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்க அரசு உத்தரவு

by kannappan

மராட்டியம்: மராட்டியத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால், முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து கொரோனா சரிவை நோக்கி சென்ற தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் உச்சம் பெற்று வருகிறது. இவற்றில், மராட்டியத்தில் மீண்டும் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. மராட்டியத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25.64  லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்து உள்ளது. மராட்டியத்தில் தொற்று அதிகரிப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  இதன்படி, பொது இடங்களில் முக கவசம் அணியாமல் காணப்படும் எந்த நபருக்கும் ரூ.500 அபராதம் விதிக்கலாம்.  பொது இடங்களில் யாரேனும் எச்சில் துப்புவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. பீச் மற்றும் பூந்தோட்டங்கள் உள்ளிட்ட பொது இடங்களை இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.  இந்த நடைமுறை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.  இதனை மீறுபவர்கள் தலா ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவில் தெரிவித்து உள்ளது. தொற்று அதிகரிப்பினை முன்னிட்டு மராட்டியத்தில் திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவை கொரோனா தொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஒரு வார கால ஊரடங்கு உத்தரவு அமலானது.  இவை தவிர அமராவதி, யவத்மல் மற்றும் லத்தூர் போன்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் முன்பே விதிக்கப்பட்டு விட்டன….

You may also like

Leave a Comment

eight + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi