மரவியல் பூங்கா – டென்மேரி நடைபாதையில் முட்புதர்களை அகற்ற கோரிக்கை

ஊட்டி: ஊட்டி மரவியல் பூங்காவில் இருந்து டென்மேரி செல்லும் நடைபாதையில் இருபுறமும் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊட்டி டென்மேரி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள பெண்கள் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். நகரில் இருந்து இப்பகுதிக்கு செல்ல மரவியல் பூங்காவில் இருந்து ஒரு கான்கிரீட் நடைபாதை உள்ளது. இதனையே இப்பகுதி மக்கள் மற்றும் மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால், இந்த நடைபாதையின் இரு புறங்களிலும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவிகளின் பாதுகாப்பும் கேள்வி குறியாக உள்ளது.எனவே, நடைபாதை ஓரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

Related posts

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!

84 நீர்நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுக்க அனுமதி: அரசிதழில் வெளியீடு