மரம் வளர்ப்பில் காகங்கள் பெரும் பங்கு வகுக்கின்றன

 

பல்லடம், ஜன.5: பல்லடம் வனாலயத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மரம் வளர்ப்பில் காகங்கள் பெரும் பங்கு ஆற்றுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது. பல்லடம் வனாலயத்தில் வான் மழை மாதாந்திர கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்கை சுந்தரராஜ் வரவேற்றார். செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மண்ணும் மரமும் இயக்கத்தின் அமைப்பாளர் ராஜூ பேசியதாவது: பல்லுயிர் பெருக்கத்தில் பனை மரம் முதல் இடத்தில் உள்ளது. பனை பொருட்களின் பயன்பாடு குறைந்ததால் சர்க்கரை வியாதி அதிகரித்துள்ளது. மண்ணில்லாமல் மரமில்லை மரமில்லாமல் மண்ணில்லை. இவை இரண்டும் இல்லாமல் மனித குலம் இல்லை. இயற்கை வளத்துக்கு வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் சிறப்பான பங்களிப்பு தருகின்றனர். அங்கு நீர் நிலைகளில் ஒரு நெகிழி பைகளை கூட பார்க்க முடியாது. இங்கு நீர் நிலைகளை சாக்கடையாக்கி விடுகின்றனர்.

இளம் தலைமுறையினர் மரங்கள் அவசியம் குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டு மரங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஒரு காகம் தன் வாழ்நாளில் 13 ஆயிரம் மரக்கன்றுகள் வளர காரணமாகின்றது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், பொள்ளாச்சி ஜேசீஸ் நிறுவனர் கோபாலகிருஷ்ணன், தேனீக்கள் ஆராய்ச்சியாளர் விவேகானந்தன் ஆகியோர் பேசினர். வனம் அமைப்பின் இயக்குனர் அனந்தகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து