மரத்தின் மீது பைக் மோதி வாலிபர் பலி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நிலைதடுமாறி ஓடிய பைக், மரத்தின் மீது மோதி, வாலிபர் பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி டவுன், ஜமீன் கோட்டை தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ரஞ்சித் குமார் (26). ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பையில் வாடகை வீட்டில் தங்கி, திருவள்ளூர் அடுத்த மப்பேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். நேற்று முந்தினம் ரஞ்சித்குமார், பெரும்புதூரில் உள்ள தனது நண்பர் ஆஷிஷ் வீட்டில் புத்தாண்டு கொண்டாட சென்றார். அங்கு, நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடிவிட்டு, நேற்று அதிகாலையில் தனது அறைக்கு பைக்கில் புறப்பட்டார்.ஸ்ரீபெரும்புதூர் – மணிமங்கலம் சாலையில், மலைப்பட்டு அருகே சென்றபோது, திடீரென பைக் கட்டுபாட்டை இழந்து சாலை ஓரமாக உள்ள மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ரஞ்சித்குமார் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை