மயிலாடுதுறையில் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபர் கைது

மயிலாடுதுறை, ஜூலை 3: மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் தெற்கு தெருவை சேர்ந்தவர் சதாசிவம் மகன் அரவிந்த் (26). இவர், 19 வயது இளம் பெண் ஒருவரிடம் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணோடு தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிடம் அரவிந்த் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் அரவிந்தன் பற்றி விசாரித்துள்ளார். அதில், அரவிந்தன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராதாபாய் மற்றும் மகளிர் போலீசார் அந்த பெண்ணை ஏமாற்றி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்து அரவிந்தனை கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட அரவிந்தன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்