மயிலாடுதுறையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை,ஆக.30: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை (31ம்தேதி) விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நாளை (31ம்தேதி) காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று (அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து) வேளாண்மை, நீரப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலைதுறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை மட்டும் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை