மயானத்திற்கு பாதை கோரி மனு

 

சிவகங்கை, ஜூலை 4: காரைக்குடி அருகே மயானத்திற்கு பாதை அமைத்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. காட்டுக்குடி கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்குடி தாலுகா மாத்தூர் காட்டுக்குடியிருப்பு பகுதியில் 40 பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு வசிக்கும் மக்களுக்கு பல ஆண்டு காலமாக மயானம் இல்லாததால் இறந்தவர்களை மாத்தூர் ஊராட்சி புதுக்கண்மாய் வழியாக மயானத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.மயானத்திற்கு செல்லும் பாதை தனியார் பட்டா நிலங்களாக இருந்து வருகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல ஒவ்வொரு முறையும் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மயானத்திற்கு செல்லும் பாதை அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது