மயங்கி விழுந்து முதியவர் சாவு

தர்மபுரி, ஜூலை 3: தர்மபுரி இலக்கியம்பட்டி இபி காலனியை சேர்ந்தவர் கிரி (57), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தது. இதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை