மயங்கி விழுந்து பெயிண்டர் சாவு

தர்மபுரி, ஏப்.13: தர்மபுரி அருகே, துட்டம்பட்டி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (31). பெயிண்டரான இவர், நேற்று முன்தினம், அதே பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு சண்முகம் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தர்மபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சண்முகத்துக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை