மன்னார்க்காடு அருகே சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு அருகே கரிபன்குன்று பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் மன்னார்க்காடு டி.எப்.ஓ. ஜெயப்பிரகாஷிற்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். இதில், மன்னார்க்காடு அருகே தத்தேங்கலம், கரிபன்குன்று பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை, சிறுத்ைத அடித்து கொன்று தின்றது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி சிறுத்தையை கண்காணித்து வந்தனர். அப்போது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் சிறுத்தை நடமாடியது சி.சி.டி.வி. ேகமராவில் பதிவாகி உள்ளது. அந்த சிறுத்தையை கூண்டு வைத்து டி.எப்.ஓ. ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!