மன்னார்குடி நகர காய்கனி வியாபாரிகளுக்கு நிரந்தர மார்க்கெட் அமைத்து தர வேண்டும்

 

மன்னார்குடி, ஜூலை 23: மன்னார்குடி நகரில் காய்கனி வியாபாரிகளுக்கு நிரந்தர மார்க்கெட் அமைத்து தர வேண்டும் என்று நேற்று நடைபெற்ற சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர காய்கனி வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் வர்த்தக சங்க மாநில துணை தலைவர் ஞானசேகரன் தலைமையில் நேற்று நடந்தது. வர்த்தக சங்க தலைவர் ஆனந்த், மாவட்ட பொருளாளர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அசோகன், பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மன்னார்குடி நகர காய் கனி வியாபாரிகள் சங்க தலைவராக கருணாநிதி, செயலாளராக ஹரி கிருஷ் ணன், பொருளாளராக செந்தில்குமார், துணை தலைவராக ராஜபாண்டியன், துணை செயலாளராக அழகர் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.கூட்டத்தில், மன்னார்குடி நகரத்தில் நிரந்தரமாக காய்கனி கடை வைத்திருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மினி சரக்கு வேன்கள் மூலம் வெங்காயம், தக்காளி, பூண்டு உள்ளிட்டவற்றை வியாபாரம் செய்வதை நகராட்சி மற்றும் காவல் துறையினர் இணை்ந்து கட்டுப்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்கள் மிகுந்த பகுதிகளில் தள்ளுவண்டி மற்றும் தரைக் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். காய்கனி வியாபாரிகளுக்கு என நிரந்தர மார்க்கெட் அமைத்து தர வேண்டும். நகரம் முழுவதும் சாலைகளில் சுற்றி திரிகிற மாடுகளையும், பொது மக்க ளின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள நாய்களையும் கட்டுப் படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முன்னதாக, அழகர் வரவேற்றார். செந்தில்குமார் நன்றி கூறினார்.

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை