Sunday, July 7, 2024
Home » மன்னர் கல்லூரியில் சேர இன்று இறுதி வாய்ப்பு

மன்னர் கல்லூரியில் சேர இன்று இறுதி வாய்ப்பு

by Ranjith

 

சிவகங்கை, ஜூலை 7: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் சேர மாணவ,மாணவிகளுக்கு இன்று இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் துரையரசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்து: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவிற்கு 5ஆயிரத்து 219விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டு இன சுழற்சி, மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவ,மாணவிகள் சேர்க்கை நடந்துள்ளது.

காலியிடங்கள் மற்றும் பல்கலைக்கழகம் அனுமதி அளித்த கூடுதல் இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில் எஞ்சியுள்ள காலி இடங்களுக்கு இன்று இறுதி வாய்ப்பாக வாரண்டா சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் இதுவரை விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகளும் கல்லூரியிலேயே விண்ணப்பம் பெற்று விண்ணப்பித்து உடனடியாக கலந்தாய்வில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவ,மாணவிகள் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்கள், போட்டோ உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

eight + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi