மனைவி மாயமான தகராறில் தொழிலாளிக்கு கத்திக்குத்து

மேலூர், ஆக. 24: மேலூர் அருகே அருக்கம்பட்டியை சேர்ந்தவர் சின்னக்காளை (36). சென்ட்ரிங் வேலை பார்க்கும் இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு காணாமல் போனதாக, அவரது மனைவி மீனாட்சி(28) போலீசில் புகார் அளித்தார். சின்னக்காளை காணாமல் போன அதே நாளில், அதே ஊரைச் சேர்ந்த பொன்னன் என்ற பூமியின் மனைவி ரேகாவும் மாயமானார். இதுதொடர்பாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் சில நாட்களில் கண்டுபிடித்தனர். இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக இரு வேறு இடங்களுக்கு சென்றதாகவும், இவர்களுக்குள் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அன்றையதினம் போலீசார் எழுதி வாங்கிவிட்டு, அவர்களை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தனது மனைவியை வீட்டில் இருந்து சின்னக்காளைதான் கூட்டி சென்றார் என , பூமி தரக்குறைவாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இப்பிரச்னை தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, காய்கறி வெட்டும் கத்தியால் சின்னக்காளையின் கழுத்தில் சரமாரியாக வெட்டியதுடன், வயிற்றிலும் குத்தினார். இதில் படுகாயமடைந்த சின்னக்காளை மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பூமியை தேடி வருகின்றனர்.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்