தர்மபுரி, ஜூலை 6:தர்மபுரி அடுத்த மகேந்திரமங்கலம் அருகே உள்ள கருக்கனள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னப்பன் (28), விவசாயி. இவரது மனைவி மோனிஷா (21). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில் கோபித்து கொண்டு, மோனிஷா பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சென்னப்பன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.