Thursday, June 27, 2024
Home » மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் இருவேறு இடங்களில் 2 பேர் தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் இருவேறு இடங்களில் 2 பேர் தற்கொலை

by Ranjith

 

ஈரோடு, ஜன. 8:பெருந்துறை ராஜா வீதியை சேர்ந்தவர் கவுதம்(33). சிக்கன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கீதா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். கவுதம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டும், கீதாவின் நடத்தை மீது சந்தேகப்பட்டும் வந்துள்ளார். கடந்த 4ம் தேதி இரவு வீட்டிற்கு வந்த கவுதம், மனைவியிடம் வழக்கம்போல் தகராறு செய்து அடித்துள்ளார். இதனால், கீதா குழந்தைகளுடன் அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மனவேதனை அடைந்த கவுதம் கடந்த 5ம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண் டார்.

இதுகுறித்து பெருந்துறை போலீசில் நேற்று முன்தினம் கீதா அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல், சத்தியமங்கலம் கஞ்சநாயக்கனூர் பட்டக்கார வீதியை சேர்ந்தவர் வடிவேல்(36). கூலி தொழிலாளி. இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சந்திரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்திரிகா, வடிவேலுவை விட்டு பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
வடிவேலுவின் அப்பா நடராஜ் வீட்டில் வடிவேலும், அவரது மகளும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் மதுபோதையில் கடந்த 5ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் வடிவேலுவை மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து செல்லும் போது வடிவேலு மூச்சு திணறல் ஏற்பட்டு, மீண்டும் சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடா்ந்து நேற்று முன்தினம் வடிவேலு இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

10 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi