மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

 

சிவகாசி, ஜூன் 9: வேறு பெண்ணுடன் பழகியதை மனைவி கண்டித்ததால் விரக்தியடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சிவகாசி அருகே நாரணாபுரம் ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் காளியப்பன்(40). இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். காளியப்பன் அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது அங்கு வேலை பார்த்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மனைவிக்கு தெரியவரவே, காளியப்பனை கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த காளியப்பன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காளியப்பனை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை