திருப்பூர்: திருப்பூர் முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இமான் ஹமீது (23). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து இருவரும் இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்திகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் அது காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இமான் ஹமீது அந்த இளம்பெண்ணுடன் நல்லூரை அடுத்துள்ள காசிபாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கோபித்துகொண்ட அந்த இளம்பெண் கரூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதற்கிடையே இமான் ஹமீது, இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தனது பெற்றோருடன் வந்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.அந்தப் புகார் நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், இமான் ஹமீது காங்கயம் ரோடு பகுதியில் இருப்பதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இமான் ஹமீதை கைது செய்து சிறையில் அடைத்தனர்….
மனைவி ஆபாச படத்தை வெளியிட்ட கணவர் கைது
previous post