மனைவியை தாக்கிய கணவர் கைது

மானூர், ஜூன் 28: மானூர் அருகேயுள்ள காந்தீஸ்வரன்புதூரைச் சேர்ந்தவர் மாடசாமி(65). இவரது மனைவி வெள்ளத்தாய்(61). இவரது மகள் லட்சுமியை தனது தாயின் சகோதரனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். மாடசாமிக்கும் அவரது மனைவிக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்தது. இதில் மாடசாமி அவரது சொத்துக்களை தனது சகோதரன் குழந்தைகளுக்கு எழுதிக் கொடுக்கப்போவதாக கூறியுள்ளார். இதனால் குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மாடசாமி கத்தியால் மனைவியை தாக்கியுள்ளார். இதையடுத்து அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மானூர் எஸ்ஐ அழகு மாரிச்செல்வம் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை