Friday, September 20, 2024
Home » மனைவியை கொன்ற கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

மனைவியை கொன்ற கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

by Mahaprabhu

திருப்பூர், ஆக. 7: மனைவியை கொலை செய்த கணவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊதியரை சேர்ந்தவர் துரைசாமி (65). இவர் கடந்த 2019ம் ஆண்டு தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் இரும்பு கம்பியால் அவரை தாக்கினார். இதில், அவரது மனைவி உயிரிழந்தார். இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், எதிர்பாராமல் மரணம் நடந்ததால் துரைசாமிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞராக ஜமீலா பானு ஆஜராகினார்.

You may also like

Leave a Comment

nineteen − nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi