மனைவியின் நடத்தையில் சந்தேகம் 6 மாத குழந்தையை சாலையில் தூக்கி வீசிய கொடூர தந்தை

சென்னை:சென்னை கீழ்ப்பாக்கம் 6வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (32), தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 6 மாத அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ளன. சுரேஷின் மனைவி அடிக்கடி போன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த சுரேஷ், அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து போதையில் வீட்டிற்கு வந்த சுரேஷ், தனது மனைவியிடம் ‘இந்த குழந்தை யாருக்கு பிறந்தது. என்னுடைய சாயலில் இல்லையே’ என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் 6 மாத குழந்தை என்று பாராமல் குழந்தையை தூக்கி சாலையில் வீசி எறிந்தார். இதில், எலும்பு முறிவு மற்றும் தலை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்தன. குழந்ைத ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் குழந்ைதயை சாலையில் வீசிய போதை தந்தை சுரேஷை பிடித்து விசாரித்து வருகின்றனர். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்