Friday, June 28, 2024
Home » மனைவியிடம் வீடியோ காலில் பேசியபடி கணவன் தற்கொலை

மனைவியிடம் வீடியோ காலில் பேசியபடி கணவன் தற்கொலை

by kannappan

தண்டையார்பேட்டை: அயனாவரம், மேட்டு தெருவை சேர்ந்தவர் வில்லியம் பாபு (36), எலக்ட்ரீஷியன். இவருக்கு திருமணமாகி சர்மிளா (26) என்ற மனைவியும், 3 வயதில் மகனும் உள்ளனர். தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், சர்மிளா கடந்த ஓராண்டாக கணவரை பிரிந்து தனது மகனுடன், பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் தனியாக வசித்து வந்த வில்லியம் பாபு, சற்று மனநிலை பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் தனது மனைவிக்கு வீடியோ கால் செய்த வில்லியம் பாபு, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அவர், வீடியோ காலில் பேசியபடியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். …

You may also like

Leave a Comment

twenty − 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi