மனைவிக்கு உதவியாக இருந்த கணவர் பலி

சேலம், ஜன.6: சேலம் மாவட்டம் தலைவாசல் கோவிந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிமுத்து (55) விவசாயி. இவரது மனைவி ஜெயலட்சுமி (50). கடந்த சில தினங்களுக்கு முன் ஜெயலட்சுமிக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு உதவியாக கணவர் பழனிமுத்து உடனிருந்து கவனித்து வந்தார். நேற்று அதிகாலை பழனிமுத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிமுத்து உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவிக்கு உதவியாக இருந்த கணவர் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு