மனுதர்ம நூலை தடை கோரி மனு

வண்ணாரப்பேட்டை: மனுதர்ம நூலை தடை விதிக்க வலியுறுத்தி, பெரியார் திராவிட கழகம் சார்பில், மாவட்ட செயலாளர் குமரன் தலைமையில், அக்கட்சியினர் சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதியிடம் நேற்று மனு அளித்தனர். பின்னர், குமரன் செய்தியாளரிடம் கூறியதாவது: மனுதர்ம நூலில் 8வது அத்தியாயம் 415வது ஸ்லோகத்தில் சூத்திரர்களை 7 வகையான வார்த்தைகளில் இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்த மனுதர்ம  நூலை 1927ம் ஆண்டு அம்பேத்கர் எரித்துள்ளார். தந்தை பெரியாரும் இந்த நூலை பலமுறை எரித்துள்ளார். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை இழிவுபடுத்தும் இந்த மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினார். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்