மனித சங்கிலி போராட்டம்

மதுரை, டிச. 28: தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம் மதுரை தெற்குவாசல் முதல் கிரைம் பிராஞ்ச் வரை நேற்று நடைபெற்றது. இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் மடீட்சியா தலைவர் லட்சுமிநாராயணன், சேம்பர் ஆப் காமர்ஸ் துணைத்தலைவர் செல்வம் உள்பட பல்வேறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 45 இணைப்பு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தை ஒருங்கிணைப்பாளர்கள் ரகுநாதராஜா, பொன்குமார் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி