மனவளர்ச்சி குன்றிய மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 107 வருடம் சிறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கும்பழா என்ற பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவருக்கு 14 வயதில் ஒரு மகள் உண்டு. சிறிது மனவளர்ச்சி குன்றிய இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் தாய் கடந்த சில வருடங்களுக்கு முன் கணவனை விவாகரத்து செய்து விட்டு சென்று விட்டார்.   இந்நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன் அந்த சிறுமி வகுப்பறையில் வைத்து அழுவதை கவனித்த ஆசிரியை, அவரிடம் விவரத்தை கேட்டுள்ளார். அப்போது  தனது தந்தை டிரில்லிங் எந்திரத்தால் குத்தி சித்திரவதை செய்து பலாத்காரம் செய்வதாக அந்த மாணவி கூறியுள்ளார்.  இது குறித்து பள்ளி ஆசிரியை பத்தனம்திட்டா போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கு பத்தனம்திட்டா மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமார் ஜான், சிறுமியின் தந்தைக்கு 107 வருடம் சிறைத் தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்….

Related posts

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

பத்திர பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் ஜெயங்கொண்டம் சார் பதிவாளர் கைது

இலங்கை தமிழர்களிடம் லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்