நல்லம்பள்ளி, பிப்.20: தர்மபுரி வெண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (35). இவர் சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். தொப்பூர் அடுத்துள்ள வெள்ளக்கல் குறிஞ்சி நகர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வந்த போது, எதிர்பாராத விதமாக சாலையை கடக்க முயன்ற 45 வயதுமிக்க நபர் மீது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், விபத்தில் பலியானவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது. அவர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.