மத்திய கூட்டுறவு வங்கி பேரவை கூட்டம்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 110வது பொதுப்பேரவை கூட்டம் நேற்று வங்கியின் தலைமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான சிவமலர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வங்கியின் பங்குதாரர்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் தொடக்க கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில், வங்கியின் பொதுமேலாளர்ஸ்ரீனிவாசன் ஆண்டறிக்கை வாசித்தார்.

ங்கியின் உறுப்பினர்கள் வங்கியின் ஆண்டறிக்கையை ஏற்று, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில் திருவள்ளூர் மண்டல இணைப்பதிவாளர் சண்முகவள்ளி, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் மலர்விழி, இணை இயக்குநர் (விவசாயம்) ராஜ்குமார், இணை இயக்குநர் கணேஷ், வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் வெங்கட்ரமணன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்