Wednesday, July 3, 2024
Home » மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவிப்பு

by kannappan

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு  நிவாரணம் வழங்கும் வகையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் மாறக்கூடிய அகவிலைப்படி மாதத்துக்கு ரூ.105ல் இருந்து ரூ.210  உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.5 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இந்த புதிய அகவிலைப்படி உயர்வானது 2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் திட்டமிடப்பட்ட வேலைகளுக்கான ரயில்வே சுரங்கம், எண்ணெய் வயல், முக்கிய துறைமுகங்கள் ஆகியவற்றின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் அல்லது மத்திய அரசால் நிறுவப்பட்ட கழகங்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும். மேலும், அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான  குறைந்தபட்ச ஊதிய விகிதமும் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

fourteen − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi