மத்திய அரசின் பத்ம விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

 

திருச்சி. ஜூன் 7: 2025ம் ஆண்டிற்கு மத்திய அரசின் பத்ம விருதுகளான பத்ம விபூசன், பத்ம பூசன், பத்ம ஸ்ரீ விருதுகள் பெறுவதற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… விளையாட்டில் தகுதி மற்றும் திறமை உள்ளவா்கள் தங்களுடைய முழு விவரங்களுடன், தங்களுடைய சாதனைக்கான ஆவணங்களுடன் ஜூன்.26 தேதிக்குள் விண்ணப்பங்களை https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்காணும் விருதிற்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி (தொலைபேசி எண்.0431-2420685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தொிவிக்கப்படுகிறது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்