மது விற்ற 4 பேர் கைது

 

ஈரோடு, ஜூன் 19: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க மது விலக்கு போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து மேற்கொண்டனர். இதில், டாஸ்மாக் கடைகள் மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக பி.பெ.அக்ரஹாரத்தை சேர்ந்த கென்னடி(49), சிறுவலூரை சேர்ந்த சதீஷ்(45), அந்தியூரில் ராசு(48), கோபியில் ஹாசிம்(45) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 49 மதுபாட்டில்கள் மற்றும் மது விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு மொபட்டினை பறிமுதல் செய்தனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி