மது விற்ற 2 பேர் கைது

ஸ்பிக்நகர், அக். 31: முத்தையாபுரம் எஸ்ஐக்கள் அல்லிஅரசன் மற்றும் சுந்தர் தலைமையிலான போலீசார், முத்தையாபுரம் மற்றும் முள்ளக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்தையாபுரம் பகுதியில் தங்கம்மாள்புரத்தை சேர்ந்த செந்தில்நாதபூபதி(40), முள்ளக்காட்டில் நேசமணி நகர் செல்வம் மகன் முகேஷ்(23) ஆகியோர் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி