மது விற்ற 2 பெண்கள் கைது

 

ஈரோடு, ஜூன் 25: சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் பங்களாபுதூர் போலீசார் நேற்று முன் தினம் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, டி.என்.பாளையம் பகுதியில், எரங்காட்டூர், கடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நஞ்சம்மாள் (63) என்பவரும், கொங்கர்பாளையம் சுடுகாடு அருகில் அதேபகுதியை சேர்ந்த மரியத்தாய் (60) என்பவரும் அரசு மது பாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு