மது, புகையிலை விற்ற 2 பேர் கைது

 

ஈரோடு, அக்.21: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொட்டம்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த அதேபகுதி பங்களா மேட்டை சேர்ந்த முருகேசன் (49) என்பவரை பவானிசாகர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், ஈரோடு எஸ்கேசி சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக, அங்குள்ள ஒரு கடையில் டவுன் போலீசார் சோதனை செய்தனர். இதில், கடையில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமையாளரான ஈரோடு மாரிமுத்து வீதியை சேர்ந்த ஜெயக்குமார் (48) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 200 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி