மது, புகையிலை விற்றதாக 8 பேர் அதிரடி கைது

ஈரோடு, ஜன. 7: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்கு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி, மாவட்டத்தில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் மூடிய நேரத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக ஈரோடு டவுன் நேதாஜி சாலையில் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ்(38),அந்தியூர் சிவசத்தி நகரில் தர்மராஜ்(20), பெருந்துறை திங்களூர் சாலையில் சந்திரசேகரன்(43),பெருந்துறை முருகானந்தம்(45),கொடுமுடி பஸ் ஸ்டாண்டில் அண்ணாமலை(50), கடம்பூர் சுஜில்கரை பஸ் ஸ்டாப்பில் வரதராஜ்(61) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து, 39 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், பவானி சித்தார் பஸ் ஸ்டாப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதாக பவானி கேசரி மங்களத்தை சேர்ந்த முருகன்(51), பங்களாபுதூர் டிஎன் பாளையம் அரச மரத்து வீதியில் வாணிப்புதூர் காட்டூர் முதல் வீதியை சேர்ந்த திருமுருகன்(50) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை