மது குடிக்க பணம் தராததால் வாலிபருக்கு கத்திக்குத்து 2 பேர் கைது

தவளக்குப்பம், டிச. 30: புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் கோவிந்தம்மாள் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (36). நேற்று முன்தினம் இவர், தனது நண்பர்களான இடையார்பாளையத்தை சேர்ந்த தேவா, மனோ ஆகியோருடன் அங்குள்ள தனியார் மது பார் அருகே தென்னந்தோப்பில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அங்கு வந்த பூரணாங்குப்பத்தை சேர்ந்த கமல்ராஜ் (24), கலை (எ) கலைவாணன் (24) ஆகிய இருவரும் பிரபாகரனிடம் மது வாங்கித்தரக் கேட்டு தகராறு செய்துள்ளனர். பணம் தர மறுத்ததால் பிரபாகரனை தரக்குறைவாக திட்டியுள்ளனர். மேலும், கலைவாணன், அங்கிருந்த காலி பீர் பாட்டிலால் பிரபாகரனின் தலையில் அடித்துள்ளார். கமல்ராஜ் கையில் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் தோளில் குத்தி, கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த பிரபாகரன் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து கமல்ராஜ். கலைவாணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

ஐ.டி. ஊழியரிடம் ₹10.21 லட்சம் மோசடி சைபர் கிரைமில் புகார்

ஓசூர் வாலிபர் குண்டாசில் கைது

காரிமங்கலம் அருகே மகாமுனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா