மது அருந்த பணம் தராததால் மூதாட்டி, சிறுவனுக்கு கத்திவெட்டு: வாலிபர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மது குடிக்க பணம் தராத பாட்டி, அவரது பேரனை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரத்தை சேர்ந்தவர் யுவராஜ் (24). கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாகம்மாள் (75). இவரது மகன் ரஞ்சித்குமார் (28), மருமகள் மற்றும் பேரன் புவியரசன் (4) ஆகியோருடன் வசிக்கிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை யுவராஜ், பக்கத்து வீட்டில் இருந்த நாகம்மாளிடம் மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர் தர மறுத்தார். இதையடுத்து யுவராஜ், தனது வீட்டில் காஸ் அடுப்பை பற்ற வைத்து தரும்படி கேட்டார். அதன்படி மூதாட்டி நாகம்மாள், தனது பேரன் புவியரசனுடன், யுவராஜ் வீட்டக்கு சென்றார். அப்போது யுவராஜ், மூதாட்டி மற்றும் அவரது பேரனை யுவராஜ் கத்தியால் சரமாரி வெட்டினார். இதில் 2 பேரும் படுகாயமடைந்து, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். இதை பார்த்ததும் யுவராஜ் தப்பிவிட்டார்.அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் அவர்களை மீட்டு, பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மூதாட்டிக்கும், சிறுவனுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்பேரில் பெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தண்டலம் பகுதியில் பதுங்கியிருந்த யுவராஜை, நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்….

Related posts

`அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் வாய்ப்பு குவியும்’ எனக்கூறி சாப்ட்வேர் பெண் இன்ஜினியருடன் உல்லாசம்: சினிமா உதவி இயக்குனர் கைது

வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு

நில உரிமையாளரிடம் அசல் ஆவணம் தர ரூ4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு தாசில்தார் கைது