மது அருந்தியதை தட்டிக்கேட்ட தகராறு 3 பேர் கைது

விழுப்புரம், செப். 3: விழுப்புரம் அருகே வி.புதுப்பாளையத்தை சேர்ந்த செழியன், நண்பர்கள் முரளி, விஜய், யாழ்ப்பாணன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த எழில்குமார் என்பவர் இதுதொடர்பாக கேட்டபோது, செழியன் உள்ளிட்டவர்கள் சேர்ந்து அவரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த எழில்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், செழியன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் செழியன், முரளியை கைது செய்தனர். இதனிடையே முரளி, விஜய் ஆகியோரின் தாய் விஜயலட்சுமி தன் மகன் மீது ஏன் புகார் செய்தீர்கள் என்று கேட்ட போது எழில்குமார், அவரது நண்பர் கோபி, ரவி ஆகியோர் அவரை திட்டி தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் எழில்குமார் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், எழில்குமாரை மட்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு

வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அரசு ஊழியர் ரூ.10 லட்சம் நூதன மோசடி: போலீசார் வழக்குப்பதிவு