மதுரை வேளாண் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் புகைப்பட தொகுப்பு

மதுரை: மதுரை வேளாண் கல்லூரியில் அரசு உயர் பதவிகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் புகைப்பட தொகுப்பு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மதுரை வேளாண் கல்லூரியில் அரசு உயர் பதவிகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் புகைப்பட தொகுப்பு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் இக்கல்லூரியில் பயின்ற தமிழக அரசு தலைமைச்செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோரின் படங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் தாம்பரம் காவல்துறை ஆணையர் ரவி, ஐஎப்எஸ் அதிகாரிகள் தங்கபாண்டியன், ரமேஷ் பாபு, பாஸ்கரன், மணிவாசகன், சசி குமார், ஐபிஎஸ் அதிகாரிகள் ஜெயலட்சுமி, ஜெகநாதன், கண்ணம்மாள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் முருகன், அமுதா தேவி, செந்தில்பாண்டியன், கார்த்திகேயபாண்டியன், முத்துக்குமார் உள்பட 50க்கும் மேற்பட்டோர் இந்த கல்லூரியில் பயின்று இந்திய அரசின் உயர்நிலை அரசு அதிகாரிகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சிலர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இது குறித்து வேளாண் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘வேளாண் கல்லூரியில் பயின்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் பழைய மாணவர்களின் படங்களை காட்சிப்படுத்தி வைத்துள்ளோம். இது கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்துகிறது’’ என்றார்….

Related posts

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து