மதுரை வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு கிரையப்பத்திரம் பெற்று கொள்ளலாம்

மதுரை, ஆக. 15: மதுரை வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் நேரில் வந்து கிரையப்பத்திரம் பெற்று கொள்ளலாம் என மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மதுரை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள திட்ட பகுதிகளில் ஒதுக்கீடு பெற்று முழுத்தொகையும் செலுத்திய ஒதுக்கீடுதார்கள் ஒதுக்கீடு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் அசல் ஆதார் அட்டையும், இவ்வலுவகத்திற்கு நேரில் வரப்பெற்று கிரையப்பத்திரம் பெற்று கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு