மதுரை மாவட்டத்தில் பிடிஓக்கள் மாற்றம்

திருமங்கலம், ஆக. 2: மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு யூனியன்களில் பிடிஓக்கள் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ) இருந்து வந்த பொற்செல்வி, மதுரை கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ) பணிமாறுதல் செய்யப்பட்டார். இவருக்கு பதில் சங்கர் கைலாசம் திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையாளராக பணிபுரிந்தவர் ஆவார். புதிய பிடிஓ சங்கர் கைலாசம் நேற்று பொறுப்பு ஏற்று கொண்டார்.

இதேபோல் மதுரை கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) சுந்தரசாமி, அதே யூனியனில் வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ) நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை கிழக்கு பிடிஓ (வ.ஊ) வேலவன், மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கும், மேலூர் பிடிஓ ஜெயபாலன் கொட்டாம்பட்டி பிடிஓவாகவும், கொட்டாம்பட்டி பிடிஓ அன்பரசு டி.கல்லுப்பட்டி பிடிஓவாகவும் (கி.ஊ), டி.கல்லுப்பட்டி பிடிஓ ஆசிக் வட்டாரவளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை