Tuesday, July 2, 2024
Home » மதுரை மாவட்டத்தில் பிடிஓக்கள் மாற்றம்

மதுரை மாவட்டத்தில் பிடிஓக்கள் மாற்றம்

by Ranjith

திருமங்கலம், ஆக. 2: மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு யூனியன்களில் பிடிஓக்கள் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ) இருந்து வந்த பொற்செல்வி, மதுரை கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ) பணிமாறுதல் செய்யப்பட்டார். இவருக்கு பதில் சங்கர் கைலாசம் திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையாளராக பணிபுரிந்தவர் ஆவார். புதிய பிடிஓ சங்கர் கைலாசம் நேற்று பொறுப்பு ஏற்று கொண்டார்.

இதேபோல் மதுரை கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) சுந்தரசாமி, அதே யூனியனில் வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ) நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை கிழக்கு பிடிஓ (வ.ஊ) வேலவன், மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கும், மேலூர் பிடிஓ ஜெயபாலன் கொட்டாம்பட்டி பிடிஓவாகவும், கொட்டாம்பட்டி பிடிஓ அன்பரசு டி.கல்லுப்பட்டி பிடிஓவாகவும் (கி.ஊ), டி.கல்லுப்பட்டி பிடிஓ ஆசிக் வட்டாரவளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

four × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi