மதுரை, கோ.புதூர் லூர்து அன்னை ஆலய நன்றியறிதல் விழா

மதுரை, செப். 25: மதுரை கோ.புதூர் புனித லூர்து அன்னை ஆலயம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகள் ஆனதையொட்டி, நன்றியறிதல் விழா நேற்று நடந்தது. திருச்சி சலேசிய சபையின் மாநிலத் தலைவர் அருட்தந்தை அகிலன் தலைமை வகித்து கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். பங்குதந்தை ஜார்ஜ், உதவி பங்குதந்தையர்கள் பாக்யராஜ், யூஜின், இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழாவின் ஒரு பகுதியாக அக்.1ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் பொன் மயமான ஆலயமே எனும் தலைப்பில் மறையுரை நிகழ்த்தப்பட்டு பொங்கல் விழா நடக்கிறது. நிறைவு விழாவாக வரும் 11ம் தேதி மதுரை மறை மாவட்ட ேபராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி