மதுரை : மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் பி.மூர்த்தி எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நேற்று காலை மீனாட்சியம்மன் நகரில் பிரசாரத்தை துவக்கிய அவர், பின்னர் சூர்யா நகர், அல்-அமீன் நகர், கண்ணனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். பரசுராமன்பட்டி வந்த மூர்த்திக்கு அப்பகுதி மக்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.அங்கு மூர்த்தி பேசும்போது, ‘ஒரு கட்டத்தில் இப்பகுதியில் உள்ள மக்கள் தண்ணீரின்றி வீட்டை காலி செய்து விட்டு, வெளியூர் சென்றனர். ஆனால் தற்போது கண்ணனேந்தல், பரசுராம்பட்டி உள்ளிட்ட கண்மாய்களில் நீரை தேக்கி, குடிநீர் ஆதாரத்தை பெருக்கியதால், இப்பகுதி மக்கள் குடிநீருக்கு தட்டுப்பாடின்றி, மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். இப்பகுதியில் தார்ச்சாலை அமைத்தல், மின்விளக்கு அமைத்தல் போன்ற பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறேன். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவினர் எதையும் செய்ய முன்வரவில்லை. என்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் என் தொகுதி மக்களின், நல்லது கெட்டது நிகழ்வுகளில் எல்லாம் நான் கலந்து கொண்டதால், என்னை விளம்பர பிரியர் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. எனது தொகுதியில் மக்கள் பிரச்னைகளை எல்லாம் எனது பிரச்னையாக எடுத்து கொண்டு செயலாற்றுவது என் முழுநேர வேலையாகும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்யுங்கள்’ என்றார்.பிரசாரத்தில் மாவட்ட பொருளாளர் சோமசுந்தரபாண்டியன், பகுதி செயலாளர்கள் கவுரி, சசிகுமார், வட்ட செயலாளர்கள் மணிராஜ், செங்கிஸ்கான், நிர்வாகிகள் ஜான், ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….
மதுரை கிழக்கு தொகுதியில் 10 ஆண்டுகளாக அதிமுகவினர் எதுவும் செய்யவில்லை-திமுக வேட்பாளர் மூர்த்தி எம்எல்ஏ குற்றச்சாட்டு
previous post