மதுரை காமராஜர் பல்கலையில் சர்வதேச கருத்தரங்கம்

திருப்பரங்குன்றம், செப். 24: மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லுரியின் வணிக நிர்வாக துறை சார்பில் ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. முதல்வர் புவனேஸ்வரன், துணை முதல்வர் கபிலன் தலைமை வகித்தனர். இதில் எம்சிஏ, எம்பிஏ மாணவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் மாணவர்களின் தொழில் எதிர்கால வளர்ச்சிக்கு அவர்களின் உள் மற்றும் வெளிப்புற காரணிகளை இணைக்கும் தனிப்பட்ட நெருக்கடிகளை சமாளிப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. வணிக நிர்வாக துறை பேராசிரியர் ஆனந்தராஜ் நன்றி கூறினார். வணிக நிர்வாக துறை தலைவர் முருகேசன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்