மதுரை கலெக்டர் ஆபீசில் ஆர்ப்பாட்டம்

 

மதுரை, செப்.15: மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிபிஎஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் நடராஜன் சிறப்புரையாற்றினார். சத்துணவு மாநில செயலாளர் நூர்ஜஹான் வாழ்த்துரை வழங்கினார் ஐசிடீஸ் மாவட்ட செயலாளர் மேனகா, டான்சாக் முனியசாமி, மணினிகண்ணன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் பரமேஸ்வரன், கல்யாணசுந்தரம், மாரியப்பன், வளர்மதி கோரிக்கை விளக்கவுரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் மாநில நிர்வாகிகள் நடத்தி வரும் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மேலும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் 10 பெண்கள் உள்பட 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வருவாய் துறை அழகேசன் நன்றி கூறினார்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி