மதுரை அருகே ஜல்லிக்கட்டு காளை மிரண்டு மேலே விழுந்ததில் மாட்டின் உரிமையாளர் பலி

திருமங்கலம், செப். 12: மதுரை பெருங்குடி அருகே சோளங்குருணியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (41). இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கூலித்தொழிலாளியான தங்கப்பாண்டி, வீட்டில் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தோட்டத்தில் கட்டி போட்டிருந்த காளையை தங்கப்பாண்டி அவிழ்த்து கட்ட முயன்றார்.

அப்போது மாடு திடீரென மிரண்டு அவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த தங்கப்பாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி முருகேஸ்வரி அளித்த புகாரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை